இலங்கை ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகளை உள்வாங்கும் போட்டிப் பரீட்சை 2023 (2026) வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
நாடளாவிய ரீதியிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காக, அரச சேவையிலுள்ள பட்டதாரிகள் மற்றும் ஏனைய பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கும் போட்டிப் பரீட்சை இன்று (24) நாடு முழுவதும் 1,048 பரீட்சை நிலையங்களில் வெற்றிகரமாக நிறைவுபெற்றதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இப்பரீட்சைக்காக அரச சேவையிலுள்ள 66,991 விண்ணப்பதாரர்களும், ஏனைய பிரிவைச் சேர்ந்த 96,442 விண்ணப்பதாரர்களும் விண்ணப்பித்திருந்ததுடன், விசேட தேவையுடைய 323 விண்ணப்பதாரர்கள் பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தேவையான வசதிகளையும் பரீட்சைகள் திணைக்களம் செய்துகொடுத்திருந்தது.
2023 ஆம் ஆண்டில், அரச சேவையிலுள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குவதற்கான போட்டிப் பரீட்சையொன்றை நடத்துவதற்குப் பரீட்சைகள் திணைக்களம் திட்டமிட்டிருந்தது. இருப்பினும், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த ஒரு வழக்கு ஆகியன காரணமாகக் குறித்த பரீட்சை இடைநிறுத்தப்பட்டிருந்தது. தற்போது அனைத்து வழக்கு நடவடிக்கைகளும் நிறைவடைந்திருப்பதையடுத்து, நாடு முழுவதும் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்குத் தீர்வை வழங்கும் நோக்கில், அரச சேவையிலுள்ள பட்டதாரிகளும் ஏனைய பட்டதாரிகளும் தோற்றக்கூடிய வகையில் இம்முறை பரீட்சை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
| கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் பரீட்சை – வழிகாட்டல் WhatsApp Group | Click here |
| உதவி சுங்க அத்தியட்சகர் பரீட்சை – வழிகாட்டல் WhatsApp Group | Click here |
| நீதிமன்ற எழுதுநர் பரீட்சை – வழிகாட்டல் whatsapp குழு | Click here |
