Important Notice from CEB – Full Details

அனைத்து மின் பாவனையாளர்களுக்குமான முக்கிய அறிவித்தல்

CEB

எதிர்வரும் 2024 முதல் மின்சாரப் பட்டியலானது, இலத்திரனியல் மின்பட்டியல் (e-bill) முறைக்கு மாற்றப்படுகிறது. அத்துடன், தற்போது வழங்கப்படும் காகித முறையிலான மின்சாரப் பட்டியல் முறை நிறுத்தப்படவுள்ளது.

எனவே, அனைத்து மின்சார பாவனையாளர்களும் உடனடியாக கீழ்க்காணும் முறை மூலம் இலத்திரனியல் மின்பட்டியலினை (E-Bill) பெற பதிவு செய்யுமாறு இலங்கை மின்சார சபை கேட்டுக் கொண்டுள்ளது.

CEB

ebil.ceb.lk என்ற இணையத் தளத்துக்குள் பிரவேசித்து இலத்திரனியல் மின்பட்டியல் முறைமைக்கு தற்போது உங்களைப் பதிவு செய்து கொள்ள முடியும்.

அல்லது 1987 என்ற இலக்கத்துக்கு SMS அனுப்புவதன் ஊடாக, வாடிக்கையாளர்கள் தமது Mobile Phone  இல் SMS மூலம் மின்சாரக் கட்டணத்தைப் பெற முடியும்.

அதற்கு, 1987 என்ற எண்ணுக்கு உங்கள் தொலைபேசி எண்ணுடன் EBILL<blank> மின்சாரக் கணக்கு எண் <blank> மின்னஞ்சல் முகவரி என்று குறுந்தகவலை (SMS) அனுப்ப வேண்டும்.

CEB

மேலும், ஏற்கனவே இலத்திரனியல் மின்பட்டியல் மற்றும் SMS மூலம் மின்சாரப் பட்டியலை பெற்றுக் கொள்பவர்கள், தமது மொபைல் இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரி சரியானதா என்பதை மின்மானி வாசிப்பாளர் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

CEB

அச்சிடப்பட்ட மின்கட்டணப் பட்டியல்களை முற்றிலுமாக நிறுத்துவதே இதன் நோக்கம் என்றும் மின்சார சபை தெரிவித்துள்ளது.