GCE.O/L Exam Results Update

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான அறிவிப்பு..!

மே மாதம் நிறைவடைந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் வெளியிட எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மே மாதம் 6 ஆம் திகதி நடைபெற்றதுடன், 452,979 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

அதேவேளை, 2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (31) வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Group – Click here