G.C.E A/L – 2025 பரீட்சை பெறுபேறுகள் சித்திரையில்…!

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகளை வெளியிடுவது குறித்து பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே கருத்து வெளியிட்டுள்ளார்.

அதன்படி, குறித்த பரீட்சைப் பெறுபேறுகளை சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாக வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதி கட்டத் தயாரிப்புப் பணிகள் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.