அஸ்வெசும பயனாளிகளுக்கான நவம்பர் மாதக் கொடுப்பனவு தொடர்பில் அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை (11) அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நவம்பர் மாதத்துக்கான கொடுப்பனவு தொகையை வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, எதிர்வரும் செவ்வாய்கிழமை (12) முதல் அஸ்வெசும பயனாளிகள் தங்களது வங்கிக் கணக்குகளிலிருந்து அஸ்வெசும கொடுப்பனவு தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.