2022 சாதாரண தரப் பரீட்சை தொடர்பான கல்வி அமைச்சின் முக்கிய அறிவித்தல்

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை (GCE.O/L Exam) தொடர்பில் கல்வியமைச்சு புதிய அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.

அதில், குறித்த பரீட்சையானது, அடுத்த ஆண்டு (2023) ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாத ஆரம்பத்தில் ஆரம்பமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான சாதாரண தரப்பரீட்சை தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டிற்குள் இயன்ற வரை அனைத்துப் பரீட்சைகளையும் உரிய நேரத்தில் நடாத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.