Online English Course

இலவச ஆங்கிலப் பாடநெறி

ONLINE ENGLISH COURSE

 

Polish 20220905 101513777

 

ஆங்கிலம் கற்பதற்கான மிகச்சிறந்த வழி!

அமெரிக்கன் கார்னர் – யாழ்ப்பாணம் இந்த சந்தர்ப்பத்தை உங்களுக்கு வழங்குகின்றது.

இது முற்றிலும் இலவசப் பாடநெறியாகும். பாடநெறியை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு சர்வதேச சான்றிதழ் வழங்கப்படும்.

 

விண்ணப்ப முடிவுத்திகதி: 10.09.2022

தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் – 10 க்குப் பிறகு  மின்னஞ்சல் வழியாகத் தொடர்பு கொள்ளப்படுவார்கள்.

 

இப்போதே பதிவு செய்யுங்கள்.

American Corner – Jaffna

Fee: Free

Closing Date: 10.09.2022

 

Apply here:  CLICK HERE

 

மேலதிக தொடர்புகளுக்கு:

அமெரிக்கன் கார்னர், நல்லூர், யாழ்ப்பாணம்.

0212220665 / 0764426720

 

 

 

 

ஆங்கிலம் கற்றுக்கொள்வதன் முக்கியத்துவம்

ஆங்கிலம் இன்றைய நவீன உலகத்தில் மிகவும் ஒரு முக்கிய மொழியாக மாறிவிட்டது. கல்வி, வர்த்தகம், போக்குவரத்து, சுற்றுலா என பல்வேறு துறைகளிலும் ஆங்கிலம் இன்றியமையாத மொழியாக ஆகிவிட்டது.

நிர்வாக, அரசியல் மற்றும் பொருளாதார விடயங்களில் ஆங்கில மொழியின் தாக்கம் மிகப்பெரிய அளவில் உள்ளது. ஆகவே ஆங்கில மொழியின் தேவை இன்றளவில் மிகவும் உணரப்பட்டிருக்கின்றது. உலகின் சில நாடுகள் ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொண்டு காணப்படுகின்றது. அத்துடன் பல நாடுகளில் ஆங்கிலமானது, இரண்டாம் மற்றும் மூன்றாம் மொழியாகவும் கற்பிக்கப்பட்டு வருகின்றது. ஏதோ ஒரு வகையில் ஒவ்வொரு நாட்டிலும் ஆங்கிலமானது கற்றுக் கொடுக்கப்பட்டே வருகின்றது. ஆகவே அதனுடைய தேவை மற்றும் அவசியத்தை இந்தக் கட்டுரை உங்களுக்கு விளக்குகின்றது.

உங்களுக்கு ஆங்கில மொழியில் சிறப்பான தேர்ச்சி இருந்தால், சொந்த நாட்டிலேயே பல நிறுவனங்களில் உங்களுக்கு வேலை செய்ய முடியும். அத்துடன் வெளிநாடுகளிலும் நல்ல சம்பளத்தில், நல்ல வேலைகளில் நீங்கள் பணி புரிய முடியும்.

ஊடகங்களின், இணையத்தின் மொழியாக இன்று ஆங்கிலம் காணப்படுகின்றது. நாம் சமூக ஊடகங்கள் மற்றும் தொலைபேசியைக் கூட ஆங்கில அறிவு இல்லாமல் இயங்குவது என்பது தற்போது கடினமாகி விட்டது.

ஆங்கிலம் இணையப் பாவனைக்கும், இணைய வழியிலான கற்றலுக்கும் மிகவும் அவசியமாகக் காணப்படுகின்றது. பொதுவாக பெரும்பாலான இணையத்தளங்கள் ஆங்கில மொழியிலேயே காணப்படுகின்றன. எமக்கு ஆங்கில அறிவு இருந்தால் தான் இவ்வாறான பக்கங்களில் உள்ள முக்கிய தகவல்கள், சுவாரசியமான விடயங்களை நாம் பெற்றுக் கொள்ள முடியும். அந்தளவுக்கு ஆங்கிலமானது இன்று ஒரு சர்வதேச மொழியாகி விட்டதை யாரும் மறுக்க முடியாது.

இன்றைய நெருக்கடி நிலைமைகளில் எமது கல்வி நிலை கூட இணைய வழி மூலமாகவே மேற்கொள்ளப்படுகின்றது. இதனை நாம் பயன்படுத்துவதற்கு ஆங்கிலம் மிகவும் அவசியமாகும்.

உலகில் பெரும்பாலான வணிகங்கள் ஆங்கில மொழியிலேயே நிகழ்கின்றன. எமக்கு ஆங்கில மொழியில் சரளம் இருப்பின், நாங்களும் ஒரு வெற்றிகரமான வர்த்தகத்தைத் துவங்கலாம். சர்வதேச ரீதியில் பல நாடுகளுடன் வர்த்தகத்தை மேற்கொள்ளவும் முடியும்.

அத்துடன் உலகின் ஏனைய நாடுகளுக்கு சுற்றுலா, போக்குவரத்துப் பயணங்கள் மேற்கொள்கின்ற போது, எமக்கு ஆங்கில அறிவில் போதிய புலமை இல்லாமல் இருப்பின், இப்பயணங்கள் சற்று கடினமானவையாகக் கூட மாறலாம்.

அனேகமாக உயர்கல்வியானது, இன்று பல நாடுகளிலும் ஆங்கில மொழியிலேயே நடைபெறுவதனால் நாம் எமது ஆங்கிலத் திறனை விருத்தி செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். விஞ்ஞானம், தொழில்நுட்பம், கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற பல துறைகளிலும் ஆங்கிலம் தனது ஆதிக்கத்தினை செலுத்தி வருகின்றது. இதனைக் கற்றுக் கொள்வதன் மூலமே நாம் பல உயர் பதவிகளுக்குச் செல்ல முடியும்.

உலகின் பிரசித்தி பெற்ற இசை, திரைப்படங்கள் மற்றும் நூல்கள் ஆங்கில மொழியிலேயே காணப்படுகின்றன. உங்களுக்கு நன்றாக ஆங்கில அறிவு இருப்பின், ஆங்கில மொழியில் உள்ள பல பொழுது போக்குக் கதவுகளை நீங்கள் இலகுவாகத் திறக்க முடியும். ஆங்கிலம் தெரியாவிட்டால், நாம் இவற்றை உப தலைப்புகளுடன் தான் கற்றுக் கொள்ள வேண்டும். இருப்பினும், இது எமக்கு 100 வீத பயனைத் தராது. ஆங்கில மொழியை நன்றாகக் கற்றுக் கொள்வதன் மூலமே நாம் இப்பயன்களை முழுவதுமாக அடைந்து கொள்ள வழி ஏற்படும்.

ஆகவே, நாம் அனைவரும் ஆங்கிலத்தை முடிந்தளவு கற்றுக் கொள்ள முயற்சி எடுக்க வேண்டும். இன்று பலருக்கு ஆங்கிலம் கடினம் என்கின்ற ஒரு சிந்தனை மனதில் தோன்றி விட்டதனால், அது அவர்களை ஆங்கிலத்தைக் கற்க விடாமல் தடுக்கின்றது. முதலில் ஆங்கிலம் ஒரு கடினமான மொழி அல்ல என்பதை எமது மனதில் நிலை நிறுத்த வேண்டும்.

ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்ள இப்போது பல வழிகள் எங்களுக்காக உள்ளன. ஆகவே, அவற்றை இனங்கண்டு, நாங்கள் எங்களுடைய மொழிப் புலமையை விருத்தி செய்து கொள்ள வேண்டும். இதன் மூலமாக பல்வேறு வெற்றிகளை இந்த நவீன உலகத்தில் நாங்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

தற்காலத்தில் வாழ்கின்ற சாதாரண மனிதன் அறிவு நிறைந்தவனாக இருக்க வேண்டியது அவசியமாகும். தினசரி பத்திரிகைகள், சஞ்சிகைகள் இன்று ஆங்கில மொழியிலேயே அதிகம் வெளிவருகின்றன. ஆகவே, அவற்றை வாசிப்பதன் மூலமாக எமது ஆங்கில மொழித் திறனை விருத்தி செய்து கொள்ள முடியும். ஆங்கில மொழியை அலட்சியம் செய்வதனை எந்த ஓர் அறிஞனும் விரும்ப மாட்டான். ஆகவே இதில் எவ்வாறு நமது திறனை விருத்தி செய்து கொள்ள வேண்டும் என்பதனை நாங்கள் ஆராய்ந்து, அதற்கேற்ப நாம் செயற்பட வேண்டும்.

உங்களுடைய ஆங்கில மொழித்திறனை மற்றும் பேச்சுத் திறனை வளர்ப்பதற்கான சந்தர்ப்பத்தினை அமெரிக்கன் கார்னர் – யாழ்ப்பாணம் தற்போது உங்களுக்கு இலவசமாக வழங்குகின்றது. இச்சந்தர்ப்பத்தினை நீங்கள் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் ஆங்கில மொழியில் உங்களை மென்மேலும் விருத்தி செய்து கொள்ள முடியும். ஆங்கிலத்தைக் கற்று, அகிலத்தை வெல்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *